வீட்டின் பூந்தோட்டியின் பின்புறம் மறைந்திருந்த நாகப் பாம்பை பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர் வனத்துறையினரிடம் அறிவுறுத்தலின்படி மதுக்கரை வனச்சகராக வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தார்.கோவை குனியமுத்தூர் மின் நகர் பகுதியில் உள்ள அப்துல் மாலிக் என்பவரின் வீட்டில் நேற்று இரவு சுமார் 5 அடி நீளம் உள்ள நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.
சீருடையில் ஒரு தாய்மை விழா.. காவல் நிலையத்தில் பெண் போலீசாருக்கு கோலாகல வளைகாப்பு..!
இதனை அடுத்து வீட்டின் உரிமையாளரின் மகனான ஷேக் சமீர் என்பவர் பாம்பு பிடி வீரரான ஸ்னேக் அமீன் என்பவருக்கு தகவலை தெரிவித்தார். தகவலை அடுத்து அங்கு வந்த ஸ்னேக் அமீன் வீட்டின் முன் பகுதிக்குள் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டின் பின்புறம் இருந்த நாக பாம்பை பத்திரமாக உயிருடன் மீட்டெடுத்து பிடிபட்ட பாம்பு குறித்து ஸ்நேக் அமீன் வனத்துறை அதிகாரிகளுக்கு பாம்பு பிடிபட்டதன் தகவலை தெரிவித்ததனை அடுத்து மதுக்கரை வனப்பகுதியில் பிடிபட்ட பாம்பு பத்திரமாக விடப்பட்டது.
கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெயிலின் தாக்கத்தால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் பாம்புகளை கண்டால் உடனடியாக வனத்துறை அல்லது பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டனர். பாம்பு பிடி வீரர் ஸ்நேக் அமீன் துரிதமாக செயல்பட்டு பாம்பை பத்திரமாக மீட்டதற்கு அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் குறிப்பாக நேற்று மட்டும் மாநகரப் பகுதியில் எட்டுக்கும் மேற்பட்ட பாம்புகள் பிடிக்கப்பட்டு பத்திரமாக வனத்துறை பகுதியில் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

