மேட்டுப்பாளையம் அருகே தாயை பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாயுடன் சேர்க்கும் பணி நான்காவது நாளாக தொடர்கிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட லிங்காபுரம் கிராமம் அருகில் கடந்த 25 ஆம் தேதி தாயைப் பிரிந்த யானைக்குட்டி ஒன்று சுற்றித்திரிந்ததை அந்தப் பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பல்வேறு பகுதிகளில் காணப்பட்ட யானைக் கூட்டங்களுடன் குட்டி யானையை சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

“பெயர் அவரோடது.. ஆனா இடம் என்னோடது”.. அண்ணனின் பெட்ரோல் பங்கை அபகரிக்க முயன்ற தங்கை?
ட்ரோன் கேமரா உதவியுடன் தாய் யானையை கண்டுபிடித்து குட்டி யானையை தாயிடம் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர் நான்காவது நாளான இன்றும் ஈடுபட்டு வருகின்றனர் தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் குட்டி யானையை பராமரித்து வருவதாகவும் தாயிடம் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

