சம்மர் வந்தாலே மாங்காய் சீசன் தொடங்கி விட்டது அதாவது, மார்க்கெட்டில் மாங்காய் விற்பனை அதிகமாக இருக்கும். இந்த மாங்காயை கொண்டு ஏராளமான ரெசிபிகளை செய்யலாம். அதுவும் வித்தியாசமான சுவையுடைய ரசம் ரெசிபியை செய்து கொடுக்கலாம். அதாவது, இந்த பச்சை மாங்காய் ரசத்தை செய்து கொடுங்கள். இந்த ரசம் மாங்காய் சுட்டு செய்வதால் அந்த ஸ்மோக்கி பிளேவருடன் ரசம் மிகவும் பிரமாதமாக இருக்கும் ஒருமுறை இந்த ரசத்தை செய்து கொடுத்தால் அடிக்கடி இந்த ரசத்தை செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள்.
தேவையான பொருட்கள்
- இரண்டு பச்சை மாங்காய்
- இரண்டிலிருந்து மூன்று பச்சை மிளகாய்
- இரண்டு வர மிளகாய்
- மூன்றிலிருந்து நான்கு பல் பூண்டு
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
- ஒன்றிலிருந்து இரண்டு டேபிள் ஸ்பூன் வெல்லம்
- சுவைக்கேற்ப உப்பு
- ஒரு கப் தண்ணீர்
- ஒரு கைப்பிடி கொத்துமல்லி
- தக்காளி தேவைப்பட்டால்

தாளிப்பதற்கு
- ஒரு டீஸ்பூன் எண்ணெய்
- அரை டீஸ்பூன் கடுகு
- அரை டீஸ்பூன் சீரகம்
- ஒன்றிலிருந்து இரண்டு வர மிளகாய்
- கொத்து கருவேப்பிலை
செய்முறை
Step 1: முதலில் பச்சை மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயை நெருப்பில் நன்றாக சுட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு இடி உரலில் சீரகம், பூண்டு சுட்டு எடுத்த பச்சை மாங்காய் மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
வாய் புண்ணுக்கு அருமருந்து.. சத்துக்கள் நிறைந்த ‘மணத்தக்காளி’ சட்னி..!
Step 2: பிறகு சுட்ட பச்சை மாங்காய் தோலை நீக்கிவிட வேண்டும். அதன் பின் சுட்ட மாங்காயின் தசைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கைகளால் நன்கு மசித்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதில் இடித்து வைத்துள்ள பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்க்க வேண்டும்.
Step 3: பின்னர் அதில் சுவைக்கு ஏற்ப உப்பு, வெல்லம் மற்றும் தேவையான அளவு நீரை ஊற்ற வேண்டும். பிறகு அதில் கொத்துமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு வானொலியை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு எண்ணை ஊற்றியதும் கடுகசீரகம், வரமிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். இதனை ரசத்துடன் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் ரெடி.

