நடிகை ஜோதிகா JFW நிகழ்ச்சியில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதும், தமிழ் சினிமாவில் காதல் படங்கள் குறைந்து வருவது குறித்தும் பேசியுள்ளார்.
JFW நடத்திய நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மாபா ஆனந்த் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜோதிகா, தானும் சூர்யாவும் இணைந்து மீண்டும் நடிக்கச் சிறந்த கதைக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.
பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு காதலிக்கு ரோஜா.. ஆர்த்தி ரவி அம்மா ஆதங்கம்..!
தங்களுக்கு ஏற்ற சரியான காதல் கதையை இதுவரை யாரும் சொல்லவில்லை என்றும், அதனை ஒரு பெண் இயக்குநர் இயக்கினால் மட்டுமே சரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் உண்மையான ரொமான்ஸ் மற்றும் காதல் படங்களைப் பார்த்து கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், ‘சில்லுக்கருப்பட்டி’ போன்ற அழகான படங்களைச் சிலரே இயக்குவதாகப் பாராட்டியுள்ளார்.
இப்போது வரும் படங்களில் தூய காதலை விட ‘காமம்’ (Lust) மட்டுமே அதிகமாகத் தெரிவதாகத் தன் பெண் பார்வையில் இருந்து வெளிப்படையாகப் பேசிய ஜோதிகா, அந்தப் படங்களில் உண்மையான காதல் வெளிப்படுவதில்லை என்றும் தன் ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

