நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கில், ஆர்த்தி கோரிய ரூ.40 லட்சம் ஜீவனாம்ச மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, மாதந்தோறும் ரூ.3 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. இச்சூழலில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில பதிவுகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
வசூல் வேட்டையாடும் ‘ஜன நாயகன்’.. திரையரங்குகளில் குவிந்துவரும் வரலாறு காணாத கூட்டம்..!
அந்தப் பதிவுகளில், “ஒரு உறவில் மூன்றாவது நபர் நுழையும்போது அது நாசமாகும்”, “ஒரு பெண் மனைவியாகத் தோற்பதால் அவர் ஏமாற்றப்படுவதில்லை; மாறாக ஒரு ஆண் தனது பொறுப்புகளில் தோற்பதாலேயே துரோகம் நடக்கிறது” மற்றும் “மனைவி, பிள்ளைகளை ஒதுக்கிவிட்டு காதலிக்கு ரோஜா கொடுக்கிறார்” என்பது போன்ற மறைமுகக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன. நேரடியாகப் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும், இவை ஜெயம் ரவியைக் குறித்தே பதிவிடப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

