வானிலை ஆய்வு மையத்தின் (IMD) இன்றைய (ஜூலை 10, 2026) தகவல்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை (Heavy Rain) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இந்த இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கூட்ட நெரிசல் விவகாரம்.. கனிமொழி காட்டம்..!
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இந்த மழைப்பொழிவு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் இதர வானிலை மாற்றங்களால் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் வசிப்பவர்கள் மற்றும் மலைப்பகுதிகளுக்குச் சுற்றுலா செல்பவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

