பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்குத் திறன் சார்ந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதே இந்த மாநில அளவிலான திட்டத்தின் முதன்மை நோக்கம். எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் (IT), சிறுதொழில் உற்பத்தி, மற்றும் நவீன சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பெண்களுக்குக் கூடுதல் வேலைவாய்ப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்குத் தேவையான வங்கிக் கடன்கள் மானியத்துடன் கிடைக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மூலம் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் பாதுகாப்பான போக்குவரத்து வசதி மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (Creche) அமைப்பதை அரசு ஊக்குவிக்கிறது.
அடுத்த 24 மணி நேரம் 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்.. வெயில் சுட்டெரிக்கும் மாவட்டங்கள் எவை?
மாவட்டந்தோறும் பெண்களுக்காகவே பிரத்யேகமான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, தனியார் நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும். குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்களின் மூலம் பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றுவதற்கும், அவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்கும் இந்தத் திட்டம் முக்கியத்துவம் அளிக்கிறது.

