மலையாள நடிகர் தியான் ஸ்ரீனிவாசன், தனது புதிய படமான ‘விசிட்டர்’ (Visitor) திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துப் பேசியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது. தான் ஒருநாள் கேரள முதலமைச்சராகப் பதவியேற்பேன் என்றும், அப்போது தனது சக நடிகையான நவ்யா நாயர், பட்டுப்புடவை அணிந்து முதல் வரிசையில் அமர்ந்து கண்ணீருடன் தன்னைச் ரசிப்பார் என்றும் நகைச்சுவையாகக் கூறினார்.
தியான் ஸ்ரீனிவாசன் நேரடியாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்றாலும், தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, நடிகை திரிஷா முதல் வரிசையில் அமர்ந்து உணர்ச்சிவசப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்தே அவர் இந்த நகைச்சுவை பேச்சை வெளிப்படுத்தினார்.
பழனிக்கு மொட்டை போட்டவர் யார்?.. செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன்..!
இந்த நகைச்சுவையான பேச்சின் தொடர்ச்சியாக, அதே மேடையில் இருந்த நவ்யா நாயர், “நிச்சயமாக, நீங்கள் முதலமைச்சராகும்போது நான் முதல் வரிசையில் அமர்ந்து உங்களைப் பாராட்டுவேன்” என்று விளையாட்டாகப் பதிலளித்தார். அதேபோல, நடிகர் அஜு வர்கீஸ், தியானின் இந்தப் பேச்சுக்காக முதலமைச்சர் விஜய்யிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும், “என் நண்பன் பைத்தியமாகிவிட்டான்” என்றும் மேடையிலேயே நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். சமூக வலைதளங்களில் விஜய் மற்றும் திரிஷா தொடர்பான சர்ச்சைகள் நிலவி வரும் சூழலில், தியான் ஸ்ரீனிவாசனின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

