த.வெ.க. அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட பொதுவான வெள்ளை அறிக்கையைத் தொடர்ந்து, மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மின்சார வாரியத்திற்கான (TNEB) பிரத்யேக வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மின்சாரத் துறையின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.2,47,130 கோடியாக உள்ளது. கடந்த 2021-2026 வரையிலான காலக்கட்டத்தில் மின்வாரியத்தின் செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும், வருமானம் ரூ.4.97 லட்சம் கோடியாகவும் இருந்ததால், பற்றாக்குறை மட்டும் ரூ.34,447 கோடியாக நீடிக்கிறது.
யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. நெட்டிசன்களிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!
கடந்த திமுக ஆட்சியில் குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கண்டெக்டர் கொள்முதல் உள்ளிட்டவற்றில் விஞ்ஞான ரீதியாக ரூ.58,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இனி நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் மின்சாரம் வாங்கப்பட்டு மாதம் ரூ.215 கோடி சேமிக்கப்படும் என்றும் கூறினார்.
மின் துறையில் மொத்தம் உள்ள 1,40,635 பணியிடங்களில் 65,921 இடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டிற்குள் 20,000 புதிய பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், கடந்த ஆட்சிகளில் பாதிக்கப்பட்ட 5,000 கேங்மேன்களும் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

