நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தனது திரைப்படப் புரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்து வருவதாகவும், அவர்களால் செய்ய முடியாததை வெறும் 35 நாட்களாக முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி உடனே செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.
மேலும், “திருமணம் நடந்தால் குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகும், அதேபோல் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றும் அவர் பேசினார். மகேந்திரனின் இந்த தவறான புள்ளிவிவரப் பேச்சுக்கு இணையவாசிகள் கடுமையான கண்டனங்களையும் தங்களது விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சோகங்களை மறந்து.. அவருடன் திருப்பதிக்கு விசிட் அடித்த ஹன்சிகா..!
இந்தியா சுதந்திரம் பெற்றதே 1947-ல் தான் (79 ஆண்டுகள்). ஆனால், திமுக முதன்முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததே 1967-ல் தான் (அதிமுக 1977-ல்). இப்படி இருக்கையில், வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் இரு கட்சிகளும் ஆட்சி செய்ததாகப் பொய் பேசி, முதலமைச்சர் விஜய்க்கும் தவெக-விற்கும் மகேந்திரன் முட்டுக்கொடுக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.
முன்னதாக, “விஜய்யை யாரும் கேள்வி கேட்கக் கூடாது” என்று அவர் பேசியிருந்ததும் ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

