பிரபல முன்னணி நடிகையான ஹன்சிகா மோத்வானி, கடந்த சில காலங்களாக தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த சோகங்கள் மற்றும் சவால்களை ஓரங்கட்டிவிட்டு, ஒரு புதிய தொடக்கமாக இந்த ஆன்மீகப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக, தனது தாயாருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நேரில் சென்று வழிபாடு நடத்தியுள்ளார். கோவில் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

குட்பை சொன்ன சமந்தா.. அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!
தமிழில் தற்போது ஹன்சிகா கைவசம் பல திரைப்படங்கள் வரிசையாக உள்ளன. ஜே.எம்.ராஜா இயக்கத்தில் ‘ரவுடி பேபி’, ஆர்.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஷன் படமான ‘காந்தாரி’ மற்றும் மேன், லவ் அஃபையர், சத்தாம் சிவன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இது தவிர ‘நஷா’ என்ற இணையத் தொடரிலும் அவர் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

