ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை சமந்தா தனது கர்ப்பத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
சமந்தா மற்றும் இயக்குனர்-தயாரிப்பாளர் ராஜ் நிடிமோரு தம்பதியினருக்கு டிசம்பர் மாதம் குழந்தை பிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இவர்களது படத்தின் கொண்டாட்டத்தின் போது சமந்தாவின் ‘பேபி பம்ப்’ புகைப்படங்கள் வைரலான நிலையில், தற்போது அவரே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி கூப்பிடாதீங்க.. நடிகை தமன்னா கடும் எதிர்ப்பு..!
சமந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மா இன்டி பங்காரம்’ திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ. 50 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய கமிட்மென்ட்களை முடித்த பிறகு மகப்பேறு விடுப்பு எடுக்கவுள்ளதாகவும், இந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரசிகர்களுக்காக புதிய படங்களுடன் திரும்புவேன் என்றும் சமந்தா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

