ஸ்ரீவைகுண்டம் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தவெக அரசு மற்றும் முதல்வர் விஜய் தன் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்! தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக, லஞ்சம் கேட்பது, மாமூல் கேட்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட தவெகவினர் தற்போது கற்பழிப்பு, கொலை போன்ற கொடூரக் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் பாதுகாப்பைச் சூறையாடி வருகின்றனர்.
இந்த லட்சணத்தில், முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்கள் பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுத்து, முதலில் தான் வகிக்கும் பதவியின் பொறுப்பினை உணர்ந்து, தனது சொந்தக் கட்சியினரிடம் இருந்து தமிழக மக்களைக் காக்க வேண்டும்! அப்பொழுது தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராகும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்களின் பாதுகாப்பைச் சூறையாடும் தவெகவினர்!
— Nainar Nagenthran (@NainarBJP) June 2, 2026
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி இளம்பெண் ஒருவரை தவெக நிர்வாகிகள் இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.
ஆட்டைக் கடித்து மாட்டைக்… pic.twitter.com/RbXvsoxubW

