தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போர் அடித்தவர்கள் சற்று வித்தியாசமாக குழம்பு செய்து சாப்பிட நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி அற்புதமாக பொருந்தும். அதாவது, பல்வேறு மோர் குழம்புகளை நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால், போண்டா மோர் குழம்பு செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா? இந்த போண்டா மோர் குழம்பு சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். இந்த போண்டா மோர் குழம்பு ரெசிபி குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
அரைப்பதற்கு
- மூன்று பச்சை மிளகாய்
- ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம்
- ஒரு டேபிள் ஸ்பூன் மல்லிவிதை
- ஒரு இன்ச் இஞ்சி
- அரை டீஸ்பூன் மிளகு
- ஒரு கையளவு கருவேப்பிலை
- தேங்காய் துருவியது ஒரு டீஸ்பூன்
- 30 நிமிடம் ஊறவைத்த துவரம் பருப்பு
- ரெண்டு டீஸ்பூன் 30 நிமிடம் ஊற வைத்த கடலைப்பருப்பு
- ஒரு டீஸ்பூன் 30 நிமிடம் ஊற வைத்த பச்சரிசி
போண்டாவிற்கு
- ஒரு கப் ஒரு மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பு
- கால் கப் முதல் அரை கப் வரை தண்ணீர்
- சுவைக்கேற்ப உப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
- சிறிது பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
- ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- சிறிது பொடியாக நறுக்கிய இஞ்சி
- பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
- மோர் குழம்பிற்கு ஒரு கப் கெட்டி தயிர்
- அரை கப் தண்ணீர்
- சுவைக்கேற்ப உப்பு
தாளிப்பதற்கு
- இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ஒரு டீஸ்பூன் கடுகு
- அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- 5 வர மிளகாய்
- ஒரு கொத்து கருவேப்பிலை
செய்முறை
Step 1: முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்றாக மென்மையாகும் வரை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு பாத்திரத்தில் கட்டி தயிர் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். அதில், அரைத்த மசாலாவை சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!
Step 2: பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி கொதிக்க விடாமல் சூடேற்றி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், மிக்ஸியில் ஊறவைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். அனைத்து மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கைகளால் நன்று அடித்து கிளறி விட வேண்டும்.
Step 3: அதில், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கலந்தால் போண்டா மாவு ரெடி பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சூடான எண்ணெயில் குட்டி குட்டி போண்டாக்களாக பொரித்து எடுக்க வேண்டும்.
Step 4: பின்பு பொறித்த போண்டாக்களை சூடாக இருக்கும் போதே மோர் குழம்புடன் சேர்க்க வேண்டும். இறுதியாக குழம்பை தாளிப்பதற்கு ஒரு வானொலியை அடைப்பில் வைத்து அதில், தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்புடன் சேர்த்து கலந்தால் சுவையான போண்டா மோர் குழம்பு தயார்.

