தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.
அந்த வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக நினைக்காமல் அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர்.
அதிமுக கூடாரத்தில் அதிர்ச்சி வைத்தியம்.. விஜய் அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு..!
மேலும், 717 மதுக்கடைகளை மூடிய அறிவிப்பு, பெண்களை பாதுகாக்கும் சிறப்புப்படை, மீனவர் பாதுகாக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழக வெற்றிக்கழக தனது ஆட்சியை தக்க வைக்க குதிரை பேரும் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை தருகிறது.
மேலும், முதலமைச்சர் விஜயின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்க வேண்டும். எளிமையான குடும்ப பின்னணியில், இருந்து வந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

