தமிழக சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டவர் பெரிய கருப்பன். ஒரு வாக்கு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளரிடம் இவர் தோல்வி அடைந்தார். இதை அடுத்து, அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர வழக்கில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் பதிவான தபால் வாக்கு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுமதிக்கப்பட்ட உள்ளது.
அந்த வாக்கை அந்த தொகுதி தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார். அதனால், தான் அந்த வாக்கை மீட்டு நான் போட்டியிட்ட தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும், ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக்காக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதிகள் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி பெயரில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!
அதில், தேர்தல் முடிவுக்கு எதிராக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியுமே தவிர இதுபோல ரெட் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தெரிவித்திருந்தார். மேலும், இதைத்தான் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உச்ச நீதிமன்றமும் தீர்ப்புகளும் உறுதி செய்துள்ளன என்றும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட தபால் வாழ்க்கை பெற்று மறு எண்ணிக்கை நடத்த கூறும். மணுக்கள் மீது முடிவெடுக்க தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், வழக்கமாக தபால் வாக்குகள் தொகுதி எண் பெயருடன் தான் அனுப்பப்படுகின்றன. அதனால், தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் ஆதாரமும் இல்லை என்பதால் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி ராஜகோபாலன் மனுதாரர் போட்டியிட்ட திருப்பத்தூர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, எந்த எதிர்ப்பும் மனுதாரர் தெரிவிக்கவில்லை முடிவுகள் வெளியிட்ட பின் தேர்தல் ஆணையத்தின் பணிகள் முடிவடைந்து விட்டது.
தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டதாக கூறுவது கற்பனையானது தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் வாதிட்டார். இதனை தொடர்ந்து, பெரிய கருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியுள்ளதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு வாக்கு மாறி வந்தது குறித்து தேர்தல் அதிகாரியே தகவல் தெரிவிக்கிறார்.
தபால் வாக்கு தொகுதி மாறி அனுப்பப்பட்டுள்ளது என்பதை தேர்தல் ஆணையம் மறுக்கவில்லை தப்பால் வாக்கு வேர் தொகுதிக்கு அனுப்பப்பட்டு இருந்தால் என்ன நடைமுறை பின்பற்ற வேண்டும் என சட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். இதை அடுத்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு தடைவிதித்து உத்தரவிட்டனர். தபால் வாக்கு மின்னணு வாக்குகள் மற்றும் சிசிடிவி பதிவு ஆதாரங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், தமிழக வெற்றிக்கழக 120 ஆதரவுகளில் ஒன்று நாளை வாக்கெடுக்கும் போது குறையும் இருப்பினும் 118 தான் பெரும்பான்மை என்பது அந்நாளை இந்த உத்தரவால் தமிழக வெற்றிக்கலவத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை கூடுதலாக அதிமுகவின் சிவி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் அணி மற்றும் ஆமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவிகாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

