அதிமுகவின் தலைமை பதவிக்கு நிலவும் மோதலால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஐந்து பேருடன் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்தார். எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வந்தனர்.
முன்னதாக, சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி முக்கிய நிர்வாகங்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்களும் சமீபத்தில் வெளியானது.
எங்கே போனார்கள் மற்றவர்கள்?.. 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவு..!
இது ஒரு புறம் இருக்க கட்சியின் பொது செயலாளர் ஆன எடப்பாடி கே பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் அதிமுக குழு தலைவராக எஸ்பி வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்களும் வெளியானது.
இந்நிலையில், அதிமுகவின் இபிஎஸ்க்கு வேலுமணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், சட்டசபை வளாகத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை அதிமுக எம்எல்ஏ, எஸ் பி வேலுமணியை நீண்ட நேரமாக சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுகவின் தலைமையை மாற்றுவதற்கு கழக குரல் எழுந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

