அதிமுகவின் தலைமை பதவிக்கு நிலவும் மோதலால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஐந்து பேருடன் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்தார். எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வந்தனர்.
முன்னதாக, சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி முக்கிய நிர்வாகங்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்களும் சமீபத்தில் வெளியானது. இது ஒரு புறம் இருக்க கட்சியின் பொது செயலாளர் ஆன எடப்பாடி கே பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் அதிமுக குழு தலைவராக எஸ்பி வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்களும் வெளியானது.
இதுதான் எங்க பலம்.. எஸ்.பி.வேலுமணி பெயரைக் கேட்டதும் உற்சாகத்தில் துள்ளிய அதிமுக உறுப்பினர்கள்..!
இந்த நிலையில், தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் 17 பேர் கட்சியின் பொதுச் செயலாளர் இ பி எஸ் சி க்கு ஆதரவாக கடிதம் வழங்கினர். அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி இருப்பார் என 47 எம்எல்ஏக்களில் வெறும் 17 பேர் மட்டும் கடிதம் வழங்கியுள்ளனர்.

