தமிழக வெற்றிப்கழகத்தின் தலைவர் ஆன விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. வீடியோ கான்பரென்சில் ஆஜராகி இருவரும் நீதிபதியிடம் பேசினார்.
வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!
மேலும், அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி புதிய மனு ஒன்றே தாக்கல் செய்தார். அந்த மனுவில், விஜய் மற்றும் சங்கீதா இருவரும் பரஸ்பரமாக ஆலோசித்த சமூகமாக பிரிந்து விடும் முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில், ஒன்று நீதிபதி வழக்கை உடனடியாக விசாரிக்காமல் ஒத்தி வைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கை பற்றி பல்வேறு தகவல்கள் அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, இரு தரப்பினரும் கடந்த சில வாரங்களாக தனிப்பட்ட முறையில், பேச்சுவார்த்தை நடத்தியதாகவும். அந்த பேச்சு வார்த்தையில், வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலம், சொத்து பங்கீடு என அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இருவரும் நேரில் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், அதனால் காணொளி காட்சி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், இன்றைய விசாரணை நாளில் விஜய் அதை செய்தார்.

அப்போதுதான் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு மற்றும் சங்கீதா தரப்பு வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதில், விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்துக்களின் அடிப்படையில் 250 கோடி ரூபாய் ஜீவனாம்சமாக சங்கீதா கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், 35 கோடி தர விஜய் முன் வந்ததாகவும்.

தனது மகன் ஜோசப் சஞ்சய், மகள் சாசாவை தானே பராமரித்து கொள்வதாக விஜய் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு சங்கீதா தரப்பும் ஒப்புக்கொண்ட நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் பிரிந்து விடுவதாக நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். இதை அடுத்து, 15ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.

தற்போது, தேர்தல் பரப்புரையில் பிஸியாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் வாக்கு எண்ணிக்கை நடக்க இருக்கிறது. இந்த நிலையில் தான் விஜயின் கோரிக்கை ஏற்று ஜூன் மாதத்திற்கு வழக்கு விசாரணை நீதிபதி ஒத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

