பிரண்டையில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டையை துவையல் ஆகவோ குழம்பாகவோ செய்தால் வீட்டில் யாருமே சாப்பிட மாட்டார்கள். ஆனால், இந்த முறையில் நீங்கள் சமைத்துக் கொடுத்தால் தொக்கு மிகவும் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் நிமிடத்தில் காலியாகும். அந்த சுவையான பிரண்டை தொக்கு சீக்ரட்ஸ்க்கு காரணம் இந்த பொருட்களை சேர்த்து செய்வதுதான். ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த மாதிரி செய்து பாருங்கள்.
5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..
தேவையான பொருட்கள்
- ஒரு கப் இளம் பிரண்டை
- இரண்டு வர மிளகாய்
- நெல்லிக்காய் அளவு புளி
- பச்சை மிளகாய் இரண்டு
- சிறிய துண்டு இஞ்சி
- ஒரு கைப்பிடி கருவேப்பிலை
- சிறிது மல்லித்தழை
- மூணு டீஸ்பூன் நல்லெண்ணெய்
- சிறிது வெல்லம்
- தேவைக்கேற்ப உப்பு
வறுத்து பொடியாக்க,
- ஒரு டீஸ்பூன் மல்லிவிதை
- ஒரு டீஸ்பூன் வெந்தயம்
- ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்
- ஒரு டீஸ்பூன் மிளகு

செய்முறை
Step 1: பிரண்டையின் நாற்களை நீக்கி கொடிக்கொடியாக நறுக்கவும்.
Step 2: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை சிவக்க வறுத்து பொடியாக்கவும்.
Step 3: பிறகு அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை விட்டு பிரண்டையை மற்றும் பச்சை மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அந்த சூட்டிலே கருவேப்பிலை இஞ்சி மல்லித்தழை மற்றும் புளியை சேர்க்கவும்.
Step 4: கலவை நன்றாக ஆறியவுடன் அதனுடன் வறுத்துப் பொடித்த பொடியை மற்றும் உப்பு, வெள்ளம் சேர்த்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து எடுக்கவும்.
Step 5: இந்த பிரண்டை தொக்கு செய்ய கருவேப்பிலை சேர்ப்பது அவசியமான ஒன்றாகும். மேலும், வறுத்த எள் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதுதான் இதன் சீக்ரெட்.
Step 6: மேலும், பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். வெள்ளம் சேர்ப்பது சுவையை கூட்டுவதற்காக, பிரண்டை லேசாக இருந்தால் தான் சுவை அதிகமாக இருக்கும். இந்த தொக்கு வாயில் போட்டவுடன் அல்வாவை போல வழுக்கு கொண்டு போவதை நீங்களே உணர்வீர்கள்.

