கோவை, ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீரங்கபதி. இவர் இன்று காலை காரில் அவினாசி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
கார் சின்னியம்பாளையம் அருகே வந்த போது காரின் முன் பகுதியில் திடீரென புகை வந்து உள்ளது.
சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை நிறுத்தி கீழே இறங்கினார்.
கார் தொடர்ந்து தீப்பிடித்து எரியத் துவங்கியது. சிறிய நேரத்திலேயே கார் முழுவதும் தீ பரவியது.இதுகுறித்து பீளமேடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனால், அதற்குள் கார் முழுமையாக எரிந்து நாசமானது. மேலும் விபத்து தொடர்பாக பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

