கேரள மாநிலம் கோழிக்கோட்டில், சாலை விபத்தில் இந்து உயிர்தப்பிய சிறுமியின் காட்சி வெளியாகியுள்ளது.
கோழிக்கோடு கொடியத்தூர் பகுதியில் ஆட்டோவில் தனது தந்தையுடன் குழந்தை மருத்துவமனைக்கு வந்திருந்தது. அப்போது ஆட்டோ நின்றவுடன், இறங்கிய குழந்தை, சாலையின் மறுபுறம் நின்றிருந்த தாயிடம் ஓடி சென்றது.
அந்த நேரத்தில் தந்தை ஆட்டோ ஓட்டுநருக்கு கட்டணம் செலுத்திக் கொண்டிருந்தார். அப்போது, கோழிக்கோட்டிலிருந்து வந்துக் கொண்டிருந்த பேருந்தின் முன்பாக குழந்தை ஓடியது.
எதிர்பாராத விதமாக குழந்தை சாலையை கடந்து ஓடுவதை பார்த்த ஓட்டுநர், உடனடியாக பேருந்தை வலப்புறமாக திருப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகி வருகின்றன.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சாலை விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய குழந்தை… pic.twitter.com/OfJqdzV3MY
— Ramesh (@RHoneykumar) February 2, 2026
சாலையோரத்தில் வாகனங்களில் இருந்து இறங்கும் போது குழந்தைகள் மீது பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

