தேவையான பொருட்கள்
- ராகி மாவு (கேழ்வரகு மாவு): 1 கப்
- வெல்லம் (தூள் செய்தது): ¾ கப்
- நெய்: தேவையான அளவு
- ஏலக்காய் பொடி: ½ டீஸ்பூன்
- முந்திரி, திராட்சை: தேவையான அளவு (விருப்பத்திற்கேற்ப)
செய்முறை
- ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி, ராகி மாவைச் சேர்த்து குறைந்த தீயில் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்துக்கொள்ளவும். (மாவு வறுபட்டதும் ஒரு நறுமணம் வரும்).
- வறுத்த மாவை இறக்கிவிட்டு, அதில் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியைச் சேர்க்கவும்.
லஞ்சுக்கு சைடிஷ் தேடுறீங்களா?.. சுடச்சுட உருளைக்கிழங்கு பொடிமாஸ்..!
- முந்திரி, திராட்சையைத் தனியாக நெய்யில் வறுத்து இதனுடன் சேர்த்துக்கொள்ளவும். மீதமுள்ள உருக்கிய நெய்யை சிறிது சிறிதாகச் சேர்த்து கிளறவும்.
- கலவை சூடாக இருக்கும்போதே, கைகளில் லேசாக நெய் தடவிக்கொண்டு உங்களுக்குத் தேவையான அளவில் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும்.

