நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடு புகார்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, கருணை மதிப்பெண் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 23-ஆம் தேதி (இன்று) மறுதேர்வு நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவிகளுக்குத் தனது எக்ஸ் (X) பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “கடினமான மற்றும் மன உளைச்சல் தரும் சூழ்நிலையிலும் விடாமுயற்சியோடு தேர்வை எதிர்கொள்ளும் என் இளம் நண்பர்களுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேருவை யாருடனும் ஒப்பிட முடியாது.. சரத் பவார் சாடல்..!
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் கல்வி முறையையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் அழித்துவிட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
லட்சக்கணக்கான மாணவர்களின் உழைப்பையும், கனவையும் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்தத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வலுவான குரல் எழுப்பும் என்றும் ரனர் தெரிவித்துள்ளார்.
Re-NEET देने वाले सभी छात्रों को मेरी अनेक शुभकामनाएँ।
— Rahul Gandhi (@RahulGandhi) June 20, 2026
पूरे आत्मविश्वास के साथ परीक्षा दीजिए। कुछ भी हो, मैं हमेशा आपके साथ हूं और आपकी रक्षा करता रहूंगा।
सरकार से अपेक्षा है कि इस बार NEET बिना किसी गड़बड़ी के होगी। छात्र पहले ही बहुत तनाव झेल चुके हैं – अब किसी बच्चे की… pic.twitter.com/Z1tLbteaB2

