Author: Prime Reporter
திரிஷாவின் செயலை பாராட்டிய நடிகர் பார்த்திபன்.. புது வீடியோவை போட்டு பிரச்னையை முடிச்சு விட்டாப்ல..!
சர்ச்சைக்கு பிறகு நடிகை த்ரிஷாவின் உடல் தான முடிவை இயக்குநர் பார்த்திபன் பாராட்டி, இனி இந்த விவகாரம் குறித்து பேச வேண்டாம் என தெரிவித்தார்.
10 கிலோ வரை உடல் எடையை குறைத்த நடிகை அபிராமியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வளைகுடா போர் பதற்றத்தால் வணிக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரிப்பு. இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக விநியோகஸ்தர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
கோவையில் பல ஆட்டோ LPG பங்குகளில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டது. எரிவாயு கிடைக்காமல் ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
வாழைப்பழ தோலை சருமத்தில் பயன்படுத்தினால் இயற்கையாக குளோ கிடைக்கும். முகப்பரு, கரும்புள்ளி குறைய உதவும் எளிய பியூட்டி டிப்ஸ்கள்.
பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள் கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி…
பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் முதலைமச்சர் ஸ்டாலினிடம் நான்கு கேள்வி கேட்கிறேன் என நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும் போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், வயது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா? தமிழகத்தில் தினந்தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது? முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா? அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?…
திமுக பேனர் சரிந்து பள்ளி மாணவி காயமடைந்த சம்பவத்திற்கு தவெக அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரத்தில், திமுக கூட்டணிக் கட்சியினர் வைத்திருந்த பேனர் சரிந்து விழுந்ததில், பள்ளி மாணவி ஒருவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நல்லவேளையாக, அந்த மாணவி உயிர் தப்பியுள்ளார். போக்குவரத்து மிகுந்த பேருந்து நிறுத்தத்திற்கு அருகில், முறையான அனுமதியின்றி, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்தப் பேனர் வைக்கப்பட்டிருந்தது குறித்து காவல் நிலையத்திலும், அரசு அதிகாரிகளிடமும் முன்பே புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆளுங்கட்சிக்குப் பயந்து பேனர் குறித்த புகார்களை அதிகாரிகள் தட்டிக்கழித்திருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. உரிய அனுமதி பெற்று தமிழக வெற்றிக் கழகத்தினர் வைக்கும் பேனர்களை எல்லாம் தேடிப்பிடித்து அராஜகமாக அகற்றும்…
கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
