கொரோனா காலத்தில் கோவிந்த் வசந்தா, முஹ்சின் பராரி, வேடன் மற்றும் தாம் இணைந்து ஒரு பாடல் உருவாக்க திட்டமிட்டிருந்ததாக சின்மயி கூறினார். அப்போது வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாக கிளப்ஹவுஸ் விவாதத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதுதான் அதுகுறித்து அறிந்ததாக தெரிவித்தார்.
பின்னர் வேடன் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டதையடுத்து, திட்டமிடப்பட்ட பாடல் முதலில் நிறுத்தப்பட்டு, பின்னர் முழுமையாக கைவிடப்பட்டது. தொடர்ந்து பல பெண்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், வேடன் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தாம் பங்கேற்க மறுத்ததாகவும், அதனால் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாகவும் சின்மயி கூறினார்.
மேலும், சமூக நீதியைப் பேசும் சில ஆண்கள் பெண்களின் ஒப்புதல் இல்லாமல் எல்லை மீறும் செயல்களில் ஈடுபடுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். “இனிமேலும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் சின்மயி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பாடகி சின்மயி தனது எக்ஸ் பக்கத்தில் மிகவும் அதிர்ச்சிகரமான அதே நேரத்தில் காட்டமான பதிவைப் பகிர்ந்துள்ளார்.
கடுமையான பாலியல் துன்புறுத்தல் அல்லது தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆண்களுக்கு மேடை அமைத்துத் தந்த முந்தைய நிர்வாகங்கள் செய்த அதே தவறை, @TVKVijayHQ மற்றும் @imrajmohan ஆகியோர் செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
கோவிட் காலத்தில், கோவிந்த் வசந்தா, முஹ்சின் பராரி, வேடன் மற்றும் நான் இணைந்து ஒரு பாடலை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டது. மலையாளம் சார்ந்த ஒரு ‘கிளப்ஹவுஸ்’ (Clubhouse) நிகழ்வில் நான் பங்கேற்றபோது, வேடனுடன் நான் எப்படி இணைந்து பணியாற்ற முடியும் என்று ஒரு பெண் என்னிடம் கேட்டார்.
அப்போது அதுகுறித்த செய்திகள் பெரும்பாலும் மலையாளத்தில்தான் இருந்தன, அதனால் எனக்கு அதுபற்றித் தெரிந்திருக்கவில்லை. பின்னர் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார்.
அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, வேறு சிலராலும் வேடன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவர் பங்கேற்ற இசை நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து நிராகரித்து வந்தேன்; இதனால் எனது சொந்தப் பணிகளும் வாய்ப்புகளும் பெரிதும் பாதிக்கப்பட்டன. சமூகச் செயல்பாட்டை ஒரு முகமூடியாகப் பயன்படுத்திப் பெண்களின் சம்மதத்தை மீறும் ஆண்களின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரச்சனை என்னவென்றால், வேடன் போன்ற ஆண்களின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க விரும்பும் பெண்களுக்கு, அதே சமூகக் குழுக்களில் உள்ளவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைப்பதில்லை; அவர்கள் முற்றிலும் தனித்து விடப்படுகிறார்கள். ஏனெனில், அந்த ஆண் ஒரு ‘ஹீரோ’வாகவோ அல்லது ‘தலைவர்’ ஆகவோ பார்க்கப்படுகிறார்; ‘பொது நலன்’ அல்லது ‘பெரிய நன்மை’க்காகப் பெண்களோ அவரது அத்துமீறல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
குரலற்றவர்களின் குரலாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இவர்களில் சிலர், தாங்கள் எதிர்ப்பதாகக் கூறும் அதே வன்முறைச் செயல்களில் ஈடுபடுபவர்களாகவே இருக்கிறார்கள்.
இனி இது போதும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
I hope @TVKVijayHQ and @imrajmohan dont do exactly what the previous regimens did in men platforming accused of serious sexual harassment / assault allegations.
— Chinmayi Sripaada (@Chinmayi) June 11, 2026
During Covid, a song was announced as a collaboration between Govind Vasantha, Muhsin Parari, Vedan and me. I… https://t.co/qLRF7vwcdK

