மலையாள சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இவர் 2015ல் வெளியான இது என்ன மாயம் திரைப்படம் தான் அவருக்கு தமிழ் சினிமாவில் முதல் திரைப்படம். அதனை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா, தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி, விஜய் என பல முன்ணணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் தனது நீண்ட கால காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் வைத்து இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் குதித்த நந்திதா ஸ்வேதா.. கல்லா கட்டும் அட்டகத்தி நடிகை..!
இந்நிலையில், உடல்நலக் குறைவால் காலமான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக, கீர்த்தி சுரேஷ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக ஒரு புதிய பஞ்சாயத்து கிளம்பியுள்ளது.
பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த சத்யராஜ், அங்கிருந்த நடிகை ராதிகாவை அணைத்துக்கொண்டு ஆறுதல் கூறினார். ஆனால், அதற்கு அருகிலேயே நின்றுகொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷை அவர் துளிக்கூடக் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றார். அண்மைக் காலமாக நடிகர் விஜய்யைச் சத்யராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். கீர்த்தி சுரேஷோ விஜய்யின் தீவிர ரசிகை என்பதால், அந்தப் பகை காரணமாகவே கீர்த்தியைச் சத்யராஜ் கண்டுகொள்ளாமல் சென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.
கீர்த்தி சுரேஷை கண்டு கொள்ளாமல் சென்ற சத்யராஜ் 🤯 pic.twitter.com/ZDYmhwtZyS
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) June 11, 2026

