Author: Prime Reporter
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன். கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! DravidianModel ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டு யானை கிராம மக்களை பதற்றத்தில் ஆழ்த்தி, வனத்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்தனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் கூட முழுமையாக இல்லை.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம் இதனால் தமிழக அரசியல் கட்சிகள் படுசூடாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மீண்டும் ஆட்சியமைக்க பணியாற்றும் சூழலில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்க உள்ளது. ஒரு பக்கம் வேட்பாளர் தேர்வு, கூட்டணி பேச்சுவார்த்தை என நடந்து வரும் நிலையில், நாதக, தவெக தனியாக போட்டியிட உள்ளது. ஆனால் தேமுதிக தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஈஷா யோகா மையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலமணியுடன் பிரேமலதா சத்குருவை சந்தித்தது கூட்டணிக்கான அடித்தளம் என பேசப்பட்டது. அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச்செயாலளர் பிரேமலதா, முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை அறிவித்துள்ளார்.இது தமிழக…
இளையராஜா மற்றும் சத்குரு தொடர்பான வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கருத்துகளை கிளப்பியுள்ளது.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.இவரது கடைசி படமான ஜனநாயகன் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனையால் இன்னும் வெளியாகவில்லை நீதிமன்றமும் கைவிரித்த நிலையில், வழக்கை வாபஸ் வாங்கிய படக்குழு, சென்சார் போர்டு மூலம் மீண்டும் முறையிட்டுள்ளதால், மறுஆய்வுக்காக படம் அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலும் பிப்ரவரி மாதத்துக்குள்படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் படம் ஏப்ரலில் தான் வெளியாகும் என விநியோகஸ்தர் தரப்பில் சொல்லப்படுவதாக ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் படம் எப்போது வெளியானாலும் கொண்டாட காத்துள்ளனர். இதனிடையே விஜய் படம் எதுவும் வெளியாகாத காரணத்தால் மீண்டும் கில்லி படத்தை ரீ ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. கடந்த வருடம் தான் கில்லி ரீ ரிலீஸ் ஆனது. மீண்டும் நாளை படத்தை ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனால் மீண்டும் படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் செய்ய ரசிகர்கள் முனைப்பு காட்டி வருகின்றனர். படத்தின் முன்பதிவு சில நாட்களுக்கு முன்…
கடலைமாவாக அறியப்படும் கிராம் ப்ளோர் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சமையலில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருள் ஆகும்.
அவதூறு பரப்பியல் அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறியது, தற்போது சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது. தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக…
உடல் எடை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகள், புரதம் மற்றும் நல்ல கொழுப்பு சத்து கொண்ட உணவு முறைகள் முக்கியம்.
பாகுபலி படத்தில் நடித்த பிரபல வில்லன் நடிகர் உடல் மெலிந்து காணப்படும் புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரம்மாண்ட வில்லன் தோற்றத்தில பாகுபலி படத்தில் நடித்தவர் ராணா டகுபதி. 6.2 அடி உயரம் கொண்டு மிரட்டலான லுக்குடன் இருந்து நடிகர் தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவில் மாறிவிட்டார். 120 கிலோ எடையில் இருந்த அவர் தற்போது மெலிந்த நிலையில் இருக்கும் போட்டோ வெளியானதால் அவருக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பதட்டமாகினர். இது குறித்து பேசிய ராணா, பாகுபலி 2 ரிலீசுக்கு பிறகு தனக்கு சிறுநீரகம் செயலிழந்ததாகவும், இதயப் பிரச்சனையை சந்தித்தாகவும் கூறியுள்ளார்- இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா சென்றதால், பல படங்களில் நடிக்க முடியாமல் போனதாகவும் தேவனை தெரிவித்துள்ளார். மேலும் ஒப்பந்தமான படங்களில் நடிக்க வாங்கிய அட்வான்ஸை திருப்பி கொடுத்தாகவும், அந்த நேரத்தில தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தமுடியவில்லை. உயிர் பிழைத்தால் போதும் என்ற மனநிலையில்…
பேபி ஷாமிலி குறித்து வெளியான புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது.
