தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதல்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கூறினார்.
எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும்.. அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தம்பிதுரை விளக்கம்..!
ஆனால், ஆளுநரோ ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பது 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை வழங்கினால், தான் ஆட்சி அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகம் அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த விஜய்யை. காங்கிரஸ் தெளிவாக பார்த்தது வெளியேறியது. RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது. “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தை காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா?
என்று தெரிவித்துள்ளார்.
இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள்.
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) May 8, 2026
ஒரே இரவில் ஒன்றானார்கள்.
தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை.
ஒரே ஒரு மனிதனை நிறுத்த
விஜய்யை.
காங்கிரஸ் தெளிவாக பார்த்தது
வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல… https://t.co/3KZJNscFIr

