தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதல்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கூறினார்.
ஆனால், ஆளுநரோ ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பது 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை வழங்கினால், தான் ஆட்சி அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதை அடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவு கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார்.
ஆளுநர் மாளிகை ஒன்றும் நீதிமன்றம் அல்ல.. பெரும்பான்மை விவகாரத்தில் ப.சிதம்பரம் முக்கிய கருத்து..!
இந்நிலையில், தமிழக வெற்றிப் கழக நிர்வாகிகள் நேரில் அனுப்பியும் வேண்டுகோள் விடுத்தும் வருகின்றனர். இதனிடையே, காங்கிரஸ் தன்னுடைய ஐந்து எம்எல்ஏக்களை வைத்து தமிழக வெற்றிக்கான கழகத்திற்கு ஆதரவு அளித்துள்ளது. தற்போது, தலா இரண்டு எம்எல்ஏக்கள் வைத்துள்ள விசிக, மாக்சிஸ் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவை பெற தமிழக வெற்றி கழகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில், தேர்தலை சந்தித்த இந்த கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது குறித்து நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறது. இதனை தொடர்ந்து, தற்போது திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எந்த முடிவையும் எடுக்க மு க ஸ்டாலினுக்கு அதிகாரம் அளித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது, திமுகவின் ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.
புதுவை சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பழனிச்சாமியுடன் நேற்று ஆலோசனை நடத்தியிருந்தனர். அதிமுக ஆதரவு கேட்டதாகவும், அதுபற்றி மு க ஸ்டாலின் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும், திமுக நிர்வாகி டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஆளுநரை சந்திக்க இன்று எடப்பாடி பழனிச்சாமி நேரம் கேட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில், அதிமுக எம்பி தம்பிதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் இறைவன் அருளால் உரிய காலத்தில் அதிமுக ஆட்சி அமையும். அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். எடப்பாடி தலைமையில், ஆட்சி அமைப்பும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார்.

