தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற மக்கள் மனநிலை உருவாகியுள்ளதாக அதிமுக மூத்த தலைவர் எம்.தம்பிதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
கோவை அதிமுகவின் கோட்டை என முழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைவது உறுதி எனத் தெரிவித்தார்.
திருப்பூர் வடக்கு அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அத்திக்கடவு திட்டத்தின் விடுபட்ட பகுதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.