தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை முதல்முறையாக சந்தித்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. இந்த வெற்றி உற்சாகத்தில் விஜய் ஆளுநரை சந்தித்து தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கூறினார்.
இறுதியில் அவமானமே மிஞ்சும்.. காங்கிரஸை விமர்சித்த பாஜக..!
ஆனால், ஆளுநரோ ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பது 118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை வழங்கினால், தான் ஆட்சி அமைக்க அனுமதி கொடுக்க முடியும் என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு மேற்கொண்டால், தனிப்பெரும் கட்சியாக உள்ள தமிழக வெற்றி கழகம் அதிரடி முடிவை எடுக்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த தேசிய பொதுச்செயலாளர் எம் ஏ பேபி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது,
அதிமுகவுக்கு தேவையான ஆதரவு கிடைக்கப்போவதில்லை. ஏன் என்றால் மக்கள் வாக்களித்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளனர்.
மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை வேறு எங்கிருந்து வர வைக்க முடியாது. விஜய் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பதை உறுதி செய்வதற்கு விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். எங்கள் மதிப்பீட்டின்படி சட்டமன்றம் கூடும்போது, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டுமே உள்ளது.
என்று அவர் தெரிவித்துள்ளார்

