Author: Prime Reporter

பள்ளி வாகனம் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழந்தார். சம்பவம் பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

கர்நாடகாவை சேர்ந்த நடிகை ராஷ்மிகாவும், ஐதராபாத்தை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கீதா கோவிந்தம் படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்க தொடங்கினர். இவர்களது காதல் பற்றி ஊடகங்களில் வெளியான போதும் கூட, இருவரும் எந்த மறுப்போ, அறிவிப்போ தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இருவருக்கும் திருமணம் என்ற தகவல் காட்டுத்தீப் கடந்த சில மாதங்களாக பரவியது. இது குறித்தும் இருவரும் எந்த அறிவப்பும் வெளியிடவில்லை, இந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் என்றும், அழைப்பிதழ் ஒன்றும் சோஷியல் மீடியாவில் பரவி வைரலானது. அதில் வரும் பிப்ரவரி 26ஆம் தேதி இருவருக்கும் உதய்பூரில் திருமணம் நடைபெற உள்ளதாக அச்சிடப்பட்டிருந்தது. அதில், எங்கள் வாழ்க்கையில் முக்கியமான மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம், எங்கள் குடும்பங்களின் ஆசீர்வாதங்களுடன் நானும், ராஷ்மிகாவும் 26ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம் என விஜய் தேவரகொண்டா கூறியிருக்கிறார். மேலும் இந்த அழைப்பிதழ் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு…

Read More

நடிகை ஜோதிகா தினசரி உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாட்டு உணவுமுறையால் உடல் தகுதியை பராமரிக்கிறார். அவரது ஃபிட்னஸ் ரகசியம் ரசிகர்கள் கவனம்.

Read More

தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவு நாளில் முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டி பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ ஐயப்பன், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் பேசியுள்ளார். சட்டப்பேரவையில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டம் குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரும் எம்எல்ஏவுமான ஐயப்பன், மாணவர்களின் பசியை போக்கும் உன்னதமான திட்டம் இது என்றும், மாணவர்களுக்கு தாயாக இருந்து உணவளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். முதலமைச்சர் ரூ.5000 வரவு வைத்தது பற்றி எதுவும் பேசாமல் சட்டமன்றத்துக்கு இன்று வராமல் சென்றுவிட்டனர் என அதிமுக எம்எல்ஏக்களை கூறிய அவர், எம்ஜிஆர் எப்படி சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தாரோ, அதே போல காலை உணவுத் திட்டம் சமூகமே கொண்டாடி வருகிறது என கூறினார். மேலும் வரும் தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்றும், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசீர்வாதத்தோடு மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என கூறிய அவர், ஓபிஎஸ்க்கு நன்றி…

Read More

காபி தூள் சருமத்திற்கு இயற்கை ஸ்க்ரப் ஆக செயல்படும். கரும்புள்ளி, மங்கலான தோலை நீக்க உதவும் அழகு குறிப்பு.

Read More

அமைச்சர் கேஎன் நேரு மீது பல்வேறு ஒப்பந்தத்தில் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடியா திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஒப்பந்த மோசடி, பணி நியமன மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவவேற்கிறோம். திமுக ஆட்சி என்றாலே கமிஷன், கலக்ஷன், கரப்ஷன் என்று கூறும் அளவிற்கு லஞ்சம் புரையோடி இருப்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமைந்துள்ளது. முதல்வர் அவர்களே, சில நாட்களுக்கு முன் திமுக அமைச்சர்களின் ஊழல் புகார்களுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டீர்கள். இன்று உங்கள் அரசின் அமைச்சர்களின் ஊழல்…

Read More

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்தார். தொடர்ந்து விஜய், அஜித், பிரசாந்த் என அப்போது பீக்கில் இருந்த நடிகர்களுடன் இணைந்து நடித்து மார்க்கெட்டை தன் வசம் வைத்தார். நடிகை மீனா 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உண்டு. அவரும் அம்மாவை போல குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் விஜய்யுடன் நடித்தார். பின்னர் ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், தற்போது படிப்பில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2022ஆம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். தனி ஒரு ஆளாக தனது மகளை கவனித்து வரும் மீனா, 2வது திருமணம் செய்ய உள்ளார் என தகவல் பரவியது. ஆனால் இது குறித்து மீனா எதுவும் சொல்லவில்லை. தற்போது 2வது திருமணம்…

Read More

துளசி மாலை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டது. ஆரோக்கிய நன்மைகளும் தரும் என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் தினமும் அணிவது வழக்கம்.

Read More

பாமக செயல் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், மராட்டிய மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு விட்டதாக குற்றஞ்சாட்டி சமூகநீதிக் காவலர் வேடம் போட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல், வன்னியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10.50% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு காரணமான மு.க.ஸ்டாலின் சமூகநீதி பேசுவது சாத்தான்கள் வேதம் ஓதுவதற்கு ஒப்பானது. சச்சார் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இன்னும் கேட்டால் சச்சார் குழு பரிந்துரைகள் வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர் போராட்டங்களை நடத்தி, அவர்களுக்கு 3.5% இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்த பெருமை பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள…

Read More

ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணையும் புதிய படம் குறித்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல். திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Read More