தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகம் தனிப்பெருமாண்மை கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்திருந்தது.
இதை அடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில், தமிழக வெற்றி கழகம் ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு தருமாறு திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தமிழக வெற்றிக்கழகம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
முதல்வராகிறார் விஜய்?.. விசிகவின் நிபந்தனையற்ற ஆதரவுடன் மெஜாரிட்டியை எட்டிய தவெக..!
இந்த அழைப்பை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூஎம்.எல் என நான்கு கட்சிகளும் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுப்பதாக அறிவித்துள்ளன. அதே சமயம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுக்கவில்லை என்றும், திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் அறிவித்துள்ளது.
இதனிடையில், விடுதலை சிறுத்தைகள், ஐ.யூஎம்.எல் கட்சி ஆதரவு வழங்கியது எம்எல்ஏ ஆதரவு எண்ணிக்கை 120 ஆக தமிழக வெற்றி கழகத்திற்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரி மீண்டும் ஆளுநரை சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளதாகவும், ஆளுநர் இன்று மாலை கேரளா செல்ல இருப்பதால் அவர் நேரம் வழங்குவாரா? அல்லது ஏதேனும் அதிரடி திருப்பம் ஏற்படுமா? என்று பரபரப்பு அதிகரித்து வந்தது.
இந்நிலையில், விஜயை சந்திக்க ஆளுநர் விஜய்க்கு நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளன.

