தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, விஜய் இன்று 4-வது முறையாக ஆளுநரைச் சந்திக்கிறார். விசிக-வின் ஆதரவு கடிதத்துடன் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அவர் முறைப்படி ஆளுநரிடம் வழங்குகிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று மாலை கேரளா புறப்படுவதால், தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.