Author: Prime Reporter
தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தரம் எப்போது கிடைக்கும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது அரசின் முடிவை எதிர்நோக்கும் பணியாளர்கள் பலர் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா. S.T.சாமிநாதன். இவர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வரும் தொழில் அதிபர் ஆவார். இவரது பெயர் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உத்தேச வேட்பாளர் பட்டியலில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை வீராசாமிநாதன் தமுத்துப்பட்டியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்தார். அப்போது அவரைப் பார்க்க வந்த எரியோடு மத்தனம்பட்டியை சேர்ந்த மணி என்பவர் சால்வை பொருத்த வந்தார். அப்போது சால்வையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வீரா சாமிநாதனின் கழுத்தின் பின்பகுதியில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அலறியடிக்க அங்கிருந்து தப்பி ஓடினார். இதனை தடுக்க முயன்ற வீராசாமிநாதனின் ஆதரவாளர் நாசிமுத்து என்பவருக்கும் கத்தி குத்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் மணியை பிடித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த வீராசாமிநாதன் மற்றும் நாச்சிமுத்துவை…
AI உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் சிலர் அரைகுறை ஆடையுடன் மாண்புமிகு பாரதப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக போராட்டம் எனும் பெயரில் அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி இந்தியா முன்னெடுத்திருக்கும் இந்த மாநாட்டில் மனிதவள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு, அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் சார்ந்த நிகழ்வுகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியிருக்கும் இந்த அநாகரீகமான செயல் கடும் கண்டனத்திற்குரியது. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான நல்லாட்சியில்…
108 தட்டுக்களில் கல்வி சீர் கொண்டு 100வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது மாணவர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர் மகிழ்ச்சி நிலவியது பழம்பெரும் பள்ளியில் உற்சாகமாக நடைபெற்ற நிகழ்வு.
கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் பிளாஸ்டிக் ரோபோ நாய் அறிமுகம் செய்யப்பட்டது மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
பிரியாணி கடையில் நடந்த சோதனையில் ரூ.70 கோடி வரி மோசடி கண்டுபிடிப்பு, அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
விஜய் குறித்து ஷாலினி பகிர்ந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அஜித் தொடர்பான பேச்சு ரசிகர்கள் கவனம் ஈர்த்தது.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இசை, சினிமா மூலம் பெரும் வருமானம் ஈட்டியுள்ளார். ரசிகர்கள் ஆச்சரியம்.
மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த தி.மு.க. அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருப்பதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, கபட நாடகத் தி.மு.க. அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை. 2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் தி.மு.க. அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத்…
ரஜினிக்கு டூப் போட்ட காமெடி நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய விபரங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.
