தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை வழங்கியிருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் விஜய் தலைமையிலான அரசு பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. அதில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவி பதவி பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ், உள்ளிட்ட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய்க்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் தாய் சோபா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியது அன்னையர் தின வாழ்த்து, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விஜய் நல்லாட்சி நடத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்தியாவை திரும்பிப் பார்க்கும் பொற்கால ஆட்சியியை விஜய் தரணும் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

