Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!
    தமிழ்நாடு

    புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 9, 2026Updated:May 9, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    mk-stalin-congratulates-new-government-formation-tamilnadu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கடமையாற்ற திமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: 

    என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன.

    ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம். நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.

    அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன். ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள்.

    என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது. எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

    கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது.

    அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

    இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.

    தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும். மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும்.

    இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.

    தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில்…

    — M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 9, 2026

    DMK Opposition Party Government Formation 2026 MK Stalin Congratulations New TN Government 2026 Stalin X Post News Tamil Nadu Latest News TN Political Developments ஆட்சி அமைப்பு 2026 தமிழக அரசியல் நகர்வுகள் தமிழக செய்திகள் தமிழக புதிய அரசு திமுக எதிர்க்கட்சி மு.க.ஸ்டாலின் வாழ்த்து ஸ்டாலின் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.