கடந்தகால காதல் வாழ்க்கை மற்றும் நச்சுத்தனமான (Toxic Relationship) உறவு குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன், தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘நார்சிசிஸ்டிக் அப்யூஸ்’ (Narcissistic Abuse) எனப்படும் கடுமையான மனநல மற்றும் உணர்வுரீதியான துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அந்த உறவில் இருந்தபோது தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை முற்றிலும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகவும், இதனால் தான் பல நல்ல திரைப்பட வாய்ப்புகளை இழந்ததுடன் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக, தனது திரையுலக வாழ்க்கையில் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘டிராகன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. சட்டப்போராட்டத்தில் திருப்புமுனை..!
முன்னதாக, உறவு தொடங்கிய சில மாதங்களிலேயே திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் குறித்து அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த உறவில் உள்ள சிக்கல்களை உணர்ந்து தானே தொடர்ந்து அதனைத் தள்ளிப்போட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

