கர்நாடக அரசின் மேகதாது அணை திட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கிடைக்காமல் குருவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.
காவிரி உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த குரலில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி, மாநிலத்தின் விவசாய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நகர்வுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!
கர்நாடக அரசு உரிய காலத்தில் எப்போதுமே காவிரி நீரைத் திறந்துவிட்டதில்லை என்றும், தற்போது திறந்து விடப்பட்டுள்ளது முழுக்க முழுக்க உபரி நீர் மட்டுமே என்றும் அவர் குற்றம்சாட்டினார். கர்நாடகா உரிய காலத்தில் தண்ணீர் தராத காரணத்தினாலேயே டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியே தேவையில்லை எனத் தெரிவித்த அவர், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக சார்பில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளை ஒருபோதும் மதிப்பதில்லை என்றும் சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.

