போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படுவது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள முக்கிய அரசாணை வெளியிட்டுள்ளது. உரிய தகுதியும் முறையான ஆவணங்களும் இல்லாமல், தவறான முறையில் பெறப்பட்ட பழங்குடியினர் (Scheduled Tribe) சான்றிதழ்களை உடனடியாக ரத்து செய்து தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைகள்.. காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!
பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மற்றும் சலுகைகள் உண்மையான தகுதியுள்ள நபர்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், பெறப்பட்ட புகார்கள் மற்றும் ஆவணங்களின் மீது தீவிர விசாரணை நடத்தப்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி அரசுப் பணிகள் மற்றும் கல்வி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் மீது உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

