தமிழ்நாட்டில் பிறந்த சமந்தா பல்லாவரத்து பொண்ணு என்பது அனைவரும் அறிந்த விஷயமே. முன்னதாக, மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்த இவர். ஆரம்பத்தில் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. ஆனால், போகப்போக சரியாக பிக்கப் செய்துகொண்டு அவர் ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
விஜய், சூர்யா, தனுஷ், என உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் காரணமாகவே அவரது மார்க்கெட் சரசரவென்று உச்சத்தில் சென்றது. கிளாமர், ஹோம்லி என்று எதுவாக இருந்தாலும் அது அவருக்கு பர்பெக்ட்டாக செட் ஆனது.
நடிகை சமந்தாவும், அவரது கணவரும் இயக்குநருமான ராஜ் நிடிமொருும் இணைந்து ஆன்மீகத் தலம் ஒன்றிற்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். எளிய உடையில், இருவரும் பக்தியுடன் கோவில் வளாகத்தில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றன.
தமன்னாவை இரட்டை அர்த்தத்தில் பேசிய விவகாரம்.. பஞ்சாயத்து ஒருவழியா OVER..!
சமந்தா குறித்து இணையத்தில் பரவிவரும் சில தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதோடு, இணையத்தில் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

