சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னாவை ‘பால் அழகு’ (Milky Beauty) எனக் குறிப்பிட்டு அன்னு கபூர் பேசிய விதம் சமூக வலைதளங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியது. பெண்களை நிறம் மற்றும் உடல் தோற்றத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தும் இத்தகைய வார்த்தைப் பிரயோகத்திற்கு இணையத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம்.. வழக்கில் சிக்கிய முக்கிய அதிகாரி..!
நெட்டிசன்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பலர் அன்னு கபூரின் கருத்துக்குத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இத்தகைய இரட்டை அர்த்தம் கொண்ட மற்றும் நிறவெறியைத் தூண்டும் சொற்களைப் பொதுவெளியில் பிரபலங்கள் பயன்படுத்துவது முறையல்ல என விமர்சிக்கப்பட்டது.

தனது பேச்சுக்குத் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட கடும் பின்னடைவைக் கருத்தில்கொண்டு, நடிகர் அன்னு கபூர் உடனடியாகத் தமன்னாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளார். யாரையும் புண்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு பேசவில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

