தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, மாநிலத்தின் நிதி நிலை குறித்த அதிகாரப்பூர்வ ‘வெள்ளை அறிக்கை’யை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் மொத்த கடன் சுமை யாரும் எதிர்பாராத விதமாக ₹13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் தமிழகத்தின் மொத்த கடன் ₹5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மட்டும் மேலும் ₹5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு சராசரியாக ₹1 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!
தற்போது தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தை உட்பட ஒவ்வொருவர் தலையிலும் ₹1,28,934 கடன் சுமை உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் வட்டிக்காக ₹67,050 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது, வட்டி கட்ட மட்டுமே தினமும் ₹184 கோடி ஒதுக்கப்படுகிறது.
அரசுக்கு வரும் ஒவ்வொரு ₹100 வருவாயிலும் ₹64.40 காசு அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வட்டி கட்டவே செலவாகிறது. மீதமுள்ள ₹35.60 காசை வைத்துத்தான் வளர்ச்சிப் பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசுத் துறைகளிலேயே அதிகபட்சமாகக் மின்சாரத் துறை ₹2.47 லட்சம் கோடி கடனிலும், போக்குவரத்துத் துறை ₹72,667 கோடி இழப்பிலும் தத்தளித்து வருகின்றன.
கடன் எனும் கடலில் தள்ளாடும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டுமானால், த.வெ.க. அரசு தங்களின் தேர்தல் வாக்குறுதிகள் சிலவற்றைச் தற்காலிகமாகத் தள்ளிவைத்துவிட்டு, கடுமையான நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறைகளின் தேவையில்லாத செலவுகளைக் குறைத்து, வருவாயைப் பெருக்க திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

