கொறடா உத்தரவை மீறி வாக்களித்து, பதவியை ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக கொறடா உத்தரவை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதில் 21 எம்.எல்.ஏ-க்கள் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததால், அவர்களை எடப்பாடி பழனிசாமி மன்னித்து தகுதிநீக்கப் புகாரைத் திரும்பப் பெற்றார்.

விஜய் மீது பொறாமை? லதா ரஜினிகாந்த் ஓபனா சொல்லிட்டாங்க ப்பா..!
ஆனால், அதற்குள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த 4 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை தொடரும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். தற்போது பெருந்துறை ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா மற்றும் சத்தியபாமா ஆகிய அந்த 4 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
“தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்? உங்கள் மீது ஏன் தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது?” என்பதற்கு 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ராஜினாமா செய்தாலும் தகுதிநீக்க நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது என சபாநாயகர் அனுப்பிய இந்த நோட்டீஸ் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

