தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியுள்ள நடிகர் விஜய் மீது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பொறாமை என்று பரவும் வதந்திகளுக்கு, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் நேர்காணல் ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருந்து பின்வாங்கிய நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்து முதலமைச்சராகவும் ஆகியுள்ளார்.
இதனால் விஜய் மீது ரஜினிக்கு பொறாமை எனச் சமூக வலைத்தளங்களில் சிலர் வதந்திகளைக் கிளப்பி வந்தனர். இதுகுறித்த கேள்விக்கு தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் பதிலளித்த லதா ரஜினிகாந்த், “இத்தனை வருடங்களாகத் தெரிந்த ஒரு மாபெரும் ஆளுமையைப் பற்றி இப்படிப் பேசுவதே பெரிய தவறு. ரஜினி ஒரு பெரிய தலைவர்; அவரிடம்தான் பலர் தலைமைத்துவப் பண்பைக் கற்றுக் கொள்கிறார்கள்” என்று கொந்தளித்துள்ளார்.
காமெடியா? ஆபாச குடோனா?.. இப்படியா கொச்சைப்படுத்துவது நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!
“அவரை இந்த அளவுக்கு இறக்கிப் பேசுவது தவறு. இப்படி வதந்தி பரப்புபவர்கள் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கிறார்கள். வாய் கூசாமல் இப்படிப் பேசுவது தமிழ் மரபே இல்லை” என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள ‘மக்கள் மேடை’ என்ற இயக்கத்திற்கும் ரஜினிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ரஜினியின் பாதையும் குறிக்கோளும் முற்றிலும் வேறானது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

