கோவை மாநகராட்சிக்குட்பட்ட அவினாசி ரோடு பிரதான சாலையில் தொட்டிபாளையம் பிரிவு அத்திகுட்டை, அண்ணா நகர் பகுதியில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு மேலாக பஞ்சமி நிலத்தில் வீடுகள் கட்டி சுமார் 150 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாகியும் தங்களுக்கு இதுவரை குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கிடைக்கவில்லை என்றும் இது குறித்து பல வருடங்களாக மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், இதனால் தங்கள் பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, மின்சார வசதி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருவதாகவும் அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!
மேலும் தாங்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிக்கூடமோ, ரேஷன் கடையோ எதுவும் இல்லாமல் இருப்பதால் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். தற்சமயம் வந்துள்ள புதிய அரசாவது தங்களுடைய கோரிக்கையை ஏற்று தங்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

