தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் சட்டசபையில் முதல் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு சட்டசபை பேரவையின் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூடும், அன்று கவர்னர் உரை நிகழ்த்துவார் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், அலுவல் ஆய்வு குழு கூட்டம் முடிந்த பிறகு சட்டசபையில் அலுவல் குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அலுவல் ஆய்வு கூடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், வந்தே மாதரம் தேசிய கீதம் குறித்த மரபுகள் ஏற்கனவே உள்ளது போல தான் இருக்குமா அல்லது ஏதேனும் மாற்றும் உள்ளதா என்று கேட்டதற்கு சட்டமன்றத்தில் கவர்னர் உரை நிகழும் பொழுது என்ன நடக்கிறது என்பதை நீங்களே காணலாம் என்று தெரிவித்திருந்தார்.
பக்கம் பக்கமாக வசனம் பேசுவதை விடுங்கள்.. பாஜக கடும் சாடல்..!
மேலும், அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் காலகட்டத்தில் சட்டசபையின் நடவடிக்கைகளை மக்கள் நேரலையில் பார்த்தனர். சட்டமன்ற நிகழ்வுகளை அதிகமாக பார்ப்பதற்கு மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அரசியலுடன் நேரடியாக தொடர்பு இல்லாத இளம் வயதினர் கூட மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். முதலமைச்சர் எப்படி செயல்படுகின்றனர் என்பதை நேரடியில் பார்க்க விரும்புகின்றார். அது பற்றி உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.

