தமிழக முதலமைச்சர் விஜய் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக இன்று காலை சுமார் 9:30 மணி அளவில் நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.
முதலமைச்சர் விஜய் சென்னை விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து விமான மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இரண்டு நாட்கள் பயணமாக டெல்லிக்கு செல்லும் முதலமைச்சர் விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அரசினர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் முதலமைச்சர் விஜய் மாலை 4:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் அலுவலகமான சேவா தீர்த் பவனில் இந்த சந்திப்பானது நடைபெறுகிறது. அப்போது, மேகதாது அணை விவகாரம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி விவகாரங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து, மாலை 6:45 மணிக்கு உள்துறை அமைச்சர் மற்றும் இரவு 7:30 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதலமைச்சர் விஜய் சந்திக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல். இதை அடுத்து நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.

