கருங்காலி என்பது மனித இனத்திற்கு இதுவரை மர்மமாகவே இருக்கும் அதிசய பண்புகளை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்த மரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கருங்காலி மரம் அல்லது கருங்காலி மின்காந்த கதிர்வீச்சு மற்றும் பிற அலைகளை உறிஞ்சும் இயற்கையான பண்புகளைக் கொண்டுள்ளது.

குழந்தை பேறு இல்லையா… கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் ‘அந்த’ பொருள்..!
ஜோதிட ரீதியாக கருங்காலி செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது மற்றும் செவ்வாய் கிரகத்தின் தோஷம் உள்ளவர்கள் கருங்காலி வேல் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செவ்வாய் கிரகத்தின் தோஷங்கள் குறையும் என்று நம்பப்படுகிறது. அதை வணங்குவதற்காக உடல் வலிமையும் அளிக்கிறது.

பூஜைகளில் கருங்காலி வேல் பயன்படுத்தப்படுகிறது. கருங்காலி மின் கதிர்களை உறிஞ்சி நேர்மறை அதிர்வுகளை கடத்தும் திறன் கொண்டதாகவே இருக்கிறது. வாக்கு சித்தி என்பது மனிதனின் வார்த்தைகளை நிறைவேற்றும் சக்தியாகும்.
கருங்காலி மாலையின் முக்கிய நன்மைகள்
கருங்காலி மரம் இயற்கையிலேயே குளுமைத் தன்மை கொண்டது. இதனை மாலையாக அணியும் போது, கோடைகால உடல் சூடு மற்றும் பித்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். நம்மைச் சுற்றியுள்ள நெகட்டிவ் எனர்ஜி மற்றும் கண் திருஷ்டிகளை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

ஜோதிட ரீதியாக கருங்காலி செவ்வாய் கிரகத்திற்குரிய மரமாகக் கருதப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், ராகு-கேது பாதிப்பு உள்ளவர்கள் இதனை அணிவது சிறந்தது. மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கமின்மைப் பிரச்சினையை சரிசெய்யும். மாணவர்கள் மற்றும் தியானம் செய்பவர்களுக்கு மன ஒருமுகப்பாட்டைத் தரும்.
கருங்காலி மாலை அணியும் முறை
கருங்காலி மாலையை முதன்முதலில் அணியும் போது நல்ல நாளில் குலதெய்வம் அல்லது முருகப் பெருமான் காலடியில் வைத்து, பாலாபிஷேகம் அல்லது தூய்மையான நீரில் கழுவிவிட்டு அணிவது நலம் தரும். பெண்கள், ஆண்கள் என அனைத்து வயதினரும் இதனை அணியலாம்.

மேலும், குலதெய்வத்தின் அனுகிரகமும் இதனால் பெறப்படுகிறது. நீங்கள் வியாபாரம் செய்வவராக இருந்தால் வியாபார இடத்தில் கருங்காலியை வைத்து வழிபட்டால் வியாபாரத்தில் பெரும் லாபமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். உங்கள் செல்வாக்கும் உயரும். முருகன் மற்றும் அவரது கருங்காலிவேலின் சக்தியால் அனைத்து தொழில் முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

